என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் மிரட்டல்
நீங்கள் தேடியது "போலீஸ் மிரட்டல்"
கோயம்பேட்டில் லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பறித்த போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
போரூர்:
கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கலைவாணன். கடந்த 18-ந் தேதி இவர் கோயம்பேடு 100 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது பட்டாசு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தார். போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி லாரியில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு பண்டல்களை போலீஸ்காரர் கலைவாணன் எடுத்து சென்று விட்டார்.
இது குறித்து லாரி உரிமையாளர், கோயம்பேடு உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். விசாரணையில் போலீஸ்காரர் கலைவாணன், லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பண்டல்களை எடுத்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் கலைவாணனை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நாகர்கோவிலில் போலீஸ் என மிரட்டி தொழிலாளியை கடத்தி நகை, பணத்தை பறித்து சென்றவர் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் தொழிலாளி ஒருவர் தனியாக நின்றார். அப்போது வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து தொழிலாளி அருகில் நின்றார். அவர் தொழிலாளியிடம், தான் ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்காரர் என்று கூறினார்.
தொழிலாளி மீது புகார் வந்திருப்பதால் அவரிடம் விசாரிக்க வேண்டும் எனவும், தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வரும்படியும் கூறினார்.
தொழிலாளி அதற்கு மறுக்கவே, மோட்டார் சைக்கிள் வாலிபர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். பின்னர் வெள்ளமடம், சடயன்குளம் பகுதிக்கு கடத்திச் சென்றார். அங்கு சென்றதும் தொழிலாளியின் நகை, பணத்தை கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே முகத்தில் மயக்கப் பொடி தூவினார். இதில் தொழிலாளி மயங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த செயின், கையில் அணிந்திருந்த மோதிரம் மற்றும் சட்டைப் பையில் இருந்த பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
தொழிலாளியின் கையில் அணிந்திருந்த தங்க காப்பையும் அந்த வாலிபர் கழற்ற முயன்றுள்ளார். அது முடியாததால் அந்த வாலிபர் தொழிலாளியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்று உள்ளார். வாலிபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாலையோரம் அழுதபடி நின்றார். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து நடந்த சம்பவங்களை கூறி தன்னை ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறும், சம்பவம் பற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுக்கும்படியும் கூறினார்.
காரில் வந்தவர் தொழிலாளியை வடசேரி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அவரது உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். தொழிலாளியிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசிலும் புகார் செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X